/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
எஸ்.சி.வி., அலுவலகத்தில்போலீசார் விசாரணை
/
எஸ்.சி.வி., அலுவலகத்தில்போலீசார் விசாரணை
ADDED : ஆக 06, 2011 03:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:மதுரை உத்தங்குடியில் எஸ்.சி.வி., (சுமங்கலி கேபிள் விஷன்)
அலுவலகத்தில் ஊழியர்களிடம் ஒத்தக்கடை போலீசார் நேற்று விசாரணை நடத்தினர்.
இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் நேற்று காலை 10 மணிக்கு
அங்கு சென்றனர். எஸ்.சி.வி.,யில் இணைக்கப்பட்ட உள்ளூர் கேபிள் நிறுவனங்கள்,
அவற்றின் நிர்வாகிகள், இணைப்பு கொடுக்க கேபிள் நிறுவனங்களிடம் இருந்து
பெறப்பட்ட தொகை உள்ளிட்ட விவரங்களை ஊழியர்களிடம் விசாரித்தனர்.