sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ரூ.4.08 கோடியில் கண்மாய்கள் சீரமைப்பு

/

ரூ.4.08 கோடியில் கண்மாய்கள் சீரமைப்பு

ரூ.4.08 கோடியில் கண்மாய்கள் சீரமைப்பு

ரூ.4.08 கோடியில் கண்மாய்கள் சீரமைப்பு


ADDED : ஆக 19, 2011 04:56 AM

Google News

ADDED : ஆக 19, 2011 04:56 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலூர்:மேலூர் மற்றும் மதுரை கிழக்கு தொகுதியில் பெரியாறு கால்வாய் மற்றும் கண்மாய்களை மேம்படுத்தும் பணிக்கு ரூ.4.08 கோடி ஒதுக்கப்பட்டது. கீழவளவு பகுதியில் ஒரே நேரத்தில் 24 மடைகள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.செப்டம்பரில் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர், மேலூர் பகுதிக்கு திறக்கப்படும். இதனால் வரத்து மற்றும் கிளைக் கால்வாய்கள், கண்மாய்களில் மடைகள் பழுது பார்க்கப்படுகிறது. கீழையூர் இருவந்தான் கண்மாய், தனியாமங்கலம் கண்மாய், சாத்தமங்கலம் நரிபாஞ்சான் கண்மாய் உட்பட 18 கண்மாய்களில் 24 புதிய மடைகள் கட்டும் பணி நடக்கிறது. ஒரு மடைக்கு ரூ. 2 லட்சம் வரை செலவு செய்யப்படுகிறது.

பொது பணித்துறை செயற் பொறியாளர் அப்துல் ரசீத் கூறியதாவது: பெரியாறு மெயின் கால்வாயில் 30வது கிலோ மீட்டரில் இருந்து சிவகங்கை மாவட்டம் வரை உள்ள 83 கி.மீ., தூரத்திற்கான கால்வாய் மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தாண்டு பராமரிப்புக்கென ரூ.4 கோடியே 8 லட்சத்து 81 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டை விட இரு மடங்கு அதிகம். இதனால் மராமத்து பணிகள் மட்டுமின்றி, புதிய பணிகளும் நடக்கின்றன, என்றார். உதவி செயற் பொறியாளர் ராமச்சந்திரன், உதவி பொறியாளர்கள் கார்த்திகேயன், ஸ்ரீதரன் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us