sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்

/

மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்

மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்

மின்னல்கொடி வீட்டில் போலீஸ் சோதனை ஆவணங்கள் பறிமுதல்


ADDED : ஆக 22, 2011 02:33 AM

Google News

ADDED : ஆக 22, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை, : மதுரையில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடி செய்த வழக்கில் கைதான தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் மின்னல்கொடி,52 வீட்டில், பத்து ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

வழக்கில் அவரது தங்கை கணவர் நடராஜனையும் போலீசார் கைது செய்தனர். ஒத்தக்கடை புதுத்தாமரைப் பட்டியில் முருகனுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் 84 சென்ட் நிலம் உள்ளது. இதை போலி ஆவணங்கள் தயாரித்து விற்று மோசடி செய்ததாக மின்னல்கொடி, பத்திர எழுத்தர் விஜயகுமார், உடந்தையாக இருந்த பொட்டுக்காரன் ஆகியோரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதைதொடர்ந்து, நேற்று முன் தினம் இரவு ஆரப்பாளையத்தில் உள்ள மின்னல்கொடி வீட்டில் போலீசார் சோதனை யிட்டனர். ஒருமணி நேரம் நடந்த இச்சோதனையில், மோசடி தொடர்பாக 10 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இந்நிலையில், மோசடிக்கு உடந்தையாக இருந்த மின்னல் கொடியின் தங்கை கணவர் நடராஜனையும் போலீசார் கைது செய்தனர். கைதான நான்கு பேரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்






      Dinamalar
      Follow us