sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரை சொத்து வரி முறைகேடு மேலும் 4 பேர் 'சஸ்பெண்ட்' இதுவரை ராஜினாமா 7; 'சஸ்பெண்ட்' 16

/

மதுரை சொத்து வரி முறைகேடு மேலும் 4 பேர் 'சஸ்பெண்ட்' இதுவரை ராஜினாமா 7; 'சஸ்பெண்ட்' 16

மதுரை சொத்து வரி முறைகேடு மேலும் 4 பேர் 'சஸ்பெண்ட்' இதுவரை ராஜினாமா 7; 'சஸ்பெண்ட்' 16

மதுரை சொத்து வரி முறைகேடு மேலும் 4 பேர் 'சஸ்பெண்ட்' இதுவரை ராஜினாமா 7; 'சஸ்பெண்ட்' 16


ADDED : ஜூலை 17, 2025 06:14 AM

Google News

ADDED : ஜூலை 17, 2025 06:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை மாநகராட்சியில் தனியார் கட்டடங்களுக்கு விதிமீறி சொத்துவரி நிர்ணயம் செய்து ரூ.பல கோடி மோசடி நடந்தது தொடர்பாக பில் கலெக்டர் உட்பட மேலும் 4 பேரை கமிஷனர் சித்ரா நேற்று சஸ்பெண்ட் செய்தார்.

இம்முறைகேடு தொடர்பாக இதுவரை மாநகராட்சி ஓய்வு உதவி கமிஷனர் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தொடர்புடையதாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்பேரில் 5 தி.மு.க., மண்டல தலைவர்கள், 2 நிலைக் குழு தலைவர்கள் ராஜினாமா செய்துள்ளனர். முறைகேட்டில் தொடர்புடையதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் 55 பேர் பட்டியல் தயார் செய்துள்ளனர். தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

நேற்றுமுன்தினம் 6 பில் கலெக்டர்கள் உட்பட 7 பேரை கமிஷனர் சித்ரா சஸ்பெண்ட் செய்தார். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மேலும் ஒரு பில் கலெக்டரான காளிமுத்து, ஒப்பந்த ஊழியர்கள் பாலமுருகன், நாகராஜன், மகா பாண்டியன் ஆகிய 4 பேரை கமிஷனர் சஸ்பெண்ட் செய்தார்.

இம்முறைகேடு தொடர்பாக முந்தைய கமிஷனர் தினேஷ்குமார் ஏற்கனவே 5 பில் கலெக்டர்களை சஸ்பெண்ட் செய்தார். தற்போது வரை 8 பேர் கைதும், 11 பேர் சஸ்பெண்ட்டும் செய்யப்பட்டுள்ளனர். 5 மண்டல தலைவர்கள் உட்பட 7 பேர் ராஜினாமா செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






      Dinamalar
      Follow us