ADDED : ஏப் 24, 2025 05:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: ஜம்முகாஷ்மீர் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதலில் 26 பேர் இறந்தனர். இதைதொடர்ந்து இந்தியா முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில், விமான நிலையம், பஸ் ஸ்டாண்டுகள் உள்ளிட்ட இடங்களில் இரு துணைகமிஷனர்கள், 9 உதவி கமிஷனர்கள், 32 இன்ஸ்பெக்டர்கள், 415 எஸ்.ஐ.,க்கள் உட்பட மொத்தம் 1204 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் 102 பள்ளிவாசல், தர்காக்களில் 368 போலீசாரும், 21 கோயில்களில் 174 போலீசாரும், திருப்பரங்குன்றம் மலையில் 41 போலீசாரும், 8 சர்ச்களில் 18 போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதுதவிர ஹிந்து அமைப்புகள், முஸ்லிம் அமைப்புகளின் அலுவலகங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

