/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரே கடையை பலருக்கு வாடகைக்கு விட்டு ரூ.பல லட்சம் மோசடி மதுரையில் ஒருவர் கைது
/
ஒரே கடையை பலருக்கு வாடகைக்கு விட்டு ரூ.பல லட்சம் மோசடி மதுரையில் ஒருவர் கைது
ஒரே கடையை பலருக்கு வாடகைக்கு விட்டு ரூ.பல லட்சம் மோசடி மதுரையில் ஒருவர் கைது
ஒரே கடையை பலருக்கு வாடகைக்கு விட்டு ரூ.பல லட்சம் மோசடி மதுரையில் ஒருவர் கைது
ADDED : ஜன 29, 2025 05:07 AM

மதுரை : மதுரையில் ஒரே கடையை பலருக்கு வாடகைக்குவிட்டு ரூ.பல லட்சம் மோசடி செய்த வழக்கில் பகத்சிங் 45, என்பவர் கைது செய்யப்பட்டார்.
மதுரை கோச்சடை மாரியம்மாள். ஜூஸ் கடை நடத்தி வருகிறார். பாத்திமா கல்லுாரி அருகே திண்டுக்கல் மெயின் ரோட்டில் விளாங்குடி பகத்சிங் என்பவரது கடையில் ஜூஸ் கடை நடத்த வாடகைக்கு அணுகினார். 'மாதம் ரூ.12 ஆயிரம் வாடகை, அட்வான்ஸ் ரூ.3 லட்சம் தரவேண்டும்' என பகத்சிங் தெரிவித்தார். அதை ஏற்று அட்வான்ஸ் தொகை கொடுத்தனர். 'நான்கு நாளில் வெள்ளை அடித்து தருகிறேன்' எனக்கூறி அனுப்பினார். பத்து நாட்களாகியும் கடை சாவியை தராமல் ஏமாற்றினார். அலைபேசியையும் எடுக்கவில்லை.
அவரை தேடி வீட்டிற்கு கணவருடன் மாரியம்மாள் சென்றபோது அங்கு தல்லாகுளத்தைச் சேர்ந்த வசந்தி என்பவர் நின்றிருந்தார். அவரிடம் விசாரித்தபோது தனக்கு கடையை வாடகைக்கு விடுவதாக கூறி பகத்சிங் ரூ.2.50 லட்சம் அட்வான்ஸ் பெற்றதாக தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த மாரியம்மாள், தன்னிடமும் அட்வான்ஸ் வாங்கியிருப்பதாக கூற, வசந்தி அதிர்ச்சியுள்ளார். பின்னர் இருவரும் தங்களுக்கு வாடகைக்கு விடுவதாக கூறி கடைக்கு சென்றபோது அங்கு பிரியாணி கடை இருந்தது. உரிமையாளர் ரமேஷிடம் கேட்டபோது, ஆறு மாதமாக மாதம் ரூ.12 ஆயிரத்திற்கு கடையை நடத்தி வருவதாகவும், அட்வான்ஸ் ரூ.5.35 லட்சம் கொடுத்ததாகவும் தெரிவித்தார்.
தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த வசந்தியும், மாரியம்மாளும் தனித்தனியே கூடல்புதுார் போலீசில் புகார் செய்தனர். பகத்சிங்கை போலீசார் கைது செய்தனர்.

