/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
கஞ்சா வழக்கில் தண்டனை பெற்றவர் கோர்ட்டில் நீதிபதிக்கு கொலை மிரட்டல்
/
கஞ்சா வழக்கில் தண்டனை பெற்றவர் கோர்ட்டில் நீதிபதிக்கு கொலை மிரட்டல்
கஞ்சா வழக்கில் தண்டனை பெற்றவர் கோர்ட்டில் நீதிபதிக்கு கொலை மிரட்டல்
கஞ்சா வழக்கில் தண்டனை பெற்றவர் கோர்ட்டில் நீதிபதிக்கு கொலை மிரட்டல்
UPDATED : ஏப் 25, 2025 05:26 AM
ADDED : ஏப் 25, 2025 01:59 AM

மதுரை: மதுரை நீதிமன்றத்தில், கஞ்சா வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட இருவர் ரகளையில் ஈடுபட்டனர். ஒருவர் நீதிபதிக்கு கொலை மிரட்டல் விடுத்தார்.
மதுரை, மகபூப்பாளையம் பாண்டியராஜன், 23. இவரது சகோதரர் பிரசாந்த், 22. பாண்டியராஜனின் மனைவி சரண்யா, 20. இவர்கள், வில்லாபுரம் அருகே முட்புதரில் 25 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, 2024ல் கீரைத்துறை போலீசார் வழக்கு பதிந்தனர்.
போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளுக்கான மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. மூன்று பேருக்கும் தலா, 12 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஹரிகரகுமார் உத்தரவிட்டார். மூன்று பேரையும் சிறையில் அடைக்க அழைத்துச் செல்ல முயன்றபோது, பாண்டியராஜன், பிரசாந்த் ஆகியோர் நீதிமன்றத்தில் ரகளையில் ஈடுபட்டனர். ஜன்னல் கண்ணாடிகளை கைகளால் உடைத்து சேதப்படுத்திய அவர்களுக்கு காயம் ஏற்பட்டது.
நீதிபதியை ஆபாசமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்த பிரசாந்த், 'கிளாமர் காளியை கொலை செய்தனர். எங்கள் அண்ணனை எதற்காக என்கவுன்டரில் சுட்டுக் கொன்றனர். வெளியில் வந்து அனைவரையும் கொலை செய்வோம்' என, மிரட்டல் விடுத்தார்.
பாண்டியராஜனும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இருவரையும் அண்ணாநகர் போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தால் கோர்ட் வளாகத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

