நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அலங்காநல்லுார்: கொண்டையம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் பல்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
வெங்கடேசன் எம்.எல்.ஏ., சுகாதார இணை இயக்குனர் செல்வராஜ், மாவட்ட சுகாதார அலுவலர் பொற்செல்வன், வட்டார மருத்துவ அலுவலர் வளர்மதி முன்னிலை வகித்தனர்.
அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மருத்துவ சேவை, ரத்த பரிசோதனை, ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், அருண் விஜயன், பரந்தாமன், நிர்வாகிகள் தவ சதீஷ், ராகுல் பங்கேற்றனர்.

