/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
/
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
2026 ஜனவரியில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: 17 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது
UPDATED : நவ 27, 2024 05:25 AM
ADDED : நவ 27, 2024 05:23 AM

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 17 ஆண்டுகளுக்கு பிறகு 2026 ஜனவரியில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்குள் திருப்பணிகளை முடிக்குமாறு கோயில் நிர்வாகத்திற்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.
மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் 2009ல் நடந்தது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும் என்பது ஆகமவிதி. இதன்படி 2021ல் நடந்திருக்க வேண்டும். ஆனால் 2018 பிப்.2ல் கோயிலின் வீரவசந்தரராயர் மண்டபம் தீ விபத்தில் முற்றிலும் சிதைந்தது. சீரமைப்பு பணிக்காக அரசு நிதி ஒதுக்கீடு செய்திருந்தாலும் நிர்வாக காரணங்களால் தாமதமாக பணிகள் துவங்கி நடந்து வருகின்றன. வீரவசந்தராயர் மண்டபத்தை தவிர்த்து இதர திருப்பணிகளை செய்து கும்பாபிஷேகம் நடத்தக்கூடாது என்பதாலேயே 2021ல் கும்பாபிஷேகம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் சட்டசபையில் 2 ஆண்டுகளுக்குள் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். இதன்பிறகு திருப்பணிகள் வேகம் எடுத்தன. 4 கோபுர பணிகள் ஸ்பான்சர்கள் மூலம் நடந்து வருகின்றன. இதைதவிர்த்து இதர திருப்பணிகளுக்கு ரூ.25 கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது.
![]() |
அதற்குள் திட்டமிட்டபடி பணிகளை முடிக்க வேண்டும் என கோயில் நிர்வாகத்திற்கு, அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது.


