தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ நுண்ணீர் பாசன மானியம்

நுண்ணீர் பாசன மானியம்

நுண்ணீர் பாசன மானியம்


ADDED : ஜூலை 02, 2025 01:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 02, 2025 01:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை : பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்டத்தில் 1323 எக்டேர் பரப்பில் நுண்ணீர் பாசனம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, ரூ.10 கோடி மானியம் வழங்கப்படுகிறது.

இதில் எஸ்.சி., பிரிவினருக்கு 255 எக்டேர் ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஏக்கர் பரப்பளவு வரையுள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பாசனம் அமைப்பதற்கான கருவிகள் வாங்கும் செலவில் 100 சதவீத மானியம் வழங்கப்படும். பிற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம். நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்களை அணுகலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us