ADDED : மார் 25, 2026 11:34 PM

அ நிறம் | அளவு
மேலுார்: உறங்கான்பட்டி மந்தை கருப்பண சுவாமி கோயிலில் உள்ள ராக்காயி அம்மன் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் ஏழு நாட்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர். நேற்று கோயிலில் துவங்கிய முளைப்பாரி ஊர்வலம் 2 கி.மீ., தொலைவில் உள்ள நாட்டாமுத்தி அய்யனார் ஊருணியை அடைந்தது.
அங்கு முளைப்பாரி கரைக்கப்பட்டது. உறங்கான்பட்டியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
