ADDED : மார் 10, 2026 05:58 AM
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி வணிக நிர்வாகவியல் துறை சுயநிதிப் பிரிவு சார்பில் 'வணிக விழா 2026' என்ற தலைப்பில் அனைத்து கல்லுாரி மாணவர்களுக்கு பல்திறன் போட்டிகள் நடந்தன. முதல்வர் ராமசுப்பையா துவக்கி வைத்தார். தலைவர் விஜயராகவன், செயலாளர் ஸ்ரீதர், சுயநிதிப் பிரிவு இயக்குநர் பிரபு முன்னிலை வகித்தனர். துறைத்தலைவர் நாயாஸ் வரவேற்றார்.
சிறந்த மேலாளர், கார்ப்பரேட் அணிவகுப்பு, மவுன மொழி நடிப்பு, நடனம் உள்பட பல்வேறு தலைப்புகளில் போட்டிகளும், வினாடி வினாவும் நடந்தன. 16 கல்லுாரிகளில் இருந்து 395 மாணவர்கள் கலந்து கொண்டார்கள். அமெரிக்கன் கல்லுாரி முதலிடம், தியாகராஜர் கலைக்கல்லுாரி 2ம் இடம் வென்றன.
பேராசிரியர் ராகவேந்திரன் நன்றி கூறினார். பேராசிரியர்கள் சுரதா, லோகேஸ்வரி, வெற்றிச்செல்வி தொகுத்து வழங்கினர். மாணவர் தலைவர் முகமது ஹசன், குழுவினர் ஒருங்கிணைத்தனர்.

