ADDED : ஜன 01, 2026 05:46 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மேலுார் அரசப்பன்பட்டி ஜெயச்சந்திரன்45. கூலித் தொழிலாளி. இவர் 2014 ல் மது போதையில் ஆபாசமாக பேசினார். பக்கத்து வீட்டை சேர்ந்த பாண்டியம்மாள் 55, தட்டிக் கேட்டார். அவரை தாக்கி ஜெயச்சந்திரன் கீழே தள்ளிவிட்டார். தலையில் காயமடைந்த பாண்டியம்மாள் மதுரை அரசு மருத்துவமனையில் இறந்தார். ஜெயச்சந்திரன் மீது மே லுார் போலீசார் கொலை வழக்கு பதிந்தனர். மதுரை மகிளா அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு வழக்கறிஞர் காவிரி சாந்தி ஆஜரானார்.
நீதிபதி நாகராஜன் பிறப்பித்த உத்தரவு: ஜெயச்சந்திரனுக்கு ஆயுள் தண்டனை, ரூ.1000 அபராதம் விதி க்கப்படுகிறது என்றார்.

