sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருப்பரங்குன்றம் மலையில் விருந்து கொடுக்க ஆட்டுடன் வந்த இஸ்லாமியர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தம்

/

திருப்பரங்குன்றம் மலையில் விருந்து கொடுக்க ஆட்டுடன் வந்த இஸ்லாமியர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தம்

திருப்பரங்குன்றம் மலையில் விருந்து கொடுக்க ஆட்டுடன் வந்த இஸ்லாமியர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தம்

திருப்பரங்குன்றம் மலையில் விருந்து கொடுக்க ஆட்டுடன் வந்த இஸ்லாமியர்கள்: போலீசார் தடுத்து நிறுத்தம்

48


UPDATED : ஜன 18, 2025 07:19 PM

ADDED : ஜன 18, 2025 02:45 PM

Google News

UPDATED : ஜன 18, 2025 07:19 PM ADDED : ஜன 18, 2025 02:45 PM

48


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை, திருப்பரங்குன்றம் மலையின் புனிதத்தை கெடுத்து, முருகபெருமானை அவமதிக்கும் விதமாகவும், ஹிந்துக்கள் மனம் புண்படும் விதமாகவும் தடையை மீறி சமபந்தி விருந்து கொடுக்க தடையை மீறி வந்த இஸ்லாமியர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாருடன் வாக்குவாதம் செய்த அவர்கள் பிறகு கலைந்து சென்றனர்.Image 1370444

சமீபத்தில் மலை மீதுள்ள தர்காவிற்கு சென்ற ஒருவர், ஆடு பலியிட முயன்றதை போலீசார் தடுத்தனர். இதற்கு சில முஸ்லிம் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.இது தொடர்பாக சபாநாயகர் அப்பாவுவிடம் மணப்பாறை தி.மு.க., எம்.எல்.ஏ., அப்துல் சமது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்து இருந்தார். இந்நிலையில், சில அமைப்புகள் தடையை மீறி இன்று ஆடு, கோழி அறுத்து சமபந்து விருந்து கொடுக்கப்போவதாக அழைப்பு விடுத்து இருந்தன. இதற்கு ஹிந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால், மலை மீது யாரும் செல்ல முடியாத வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.Image 1370445

இந்நிலையில், சமபந்தி விருந்து கொடுக்க இஸ்லாமியர்கள் தடையை மீறி ஆட்டுடன் வந்தனர். அவர்களை மலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது எனக்கூறி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், இரு தரப்புக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் கலைந்து சென்றனர்.Image 1370446

இதனைத் தொடர்ந்து மலையில் தீபத்தூணில் தீபம் ஏற்றப்போவதாக ஹிந்து முன்னணி அமைப்பினர் அறிவித்து உள்ளனர். இதற்கும் போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us