நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை சவுராஷ்டிரா கல்லுாரி முதுகலை கணினி பயன்பாட்டுத்துறை சார்பில் தேசிய இளைஞர் தினவிழா கொண்டாடப்பட்டது.
செயலாளர் குமரேஷ் தலைமை வகித்தார். முதல்வர் ரவீந்திரன் முன்னிலை வகித்தார். இயக்குநர் ராமலிங்கம் அறிமுக உரையாற்றினார். மதுரை எச்.சி.எல்., துணை மேலாளர் பொன்னியின் செல்வன் பேசினார்.
துறைத்தலைவர் அனுராதா, மாணவர்களுக்கு கட்டுரைப் போட்டி, ஓவியம் வரைதல், சிறுகதை, குறும்பட போட்டிகள் நடத்தினார். வெற்றி பெற்றவர்களுக்கு ஆக்ஸ்பா சர்வதேச கல்வி நிறுவன நிர்வாகி நல்லமணி பரிசுகள் வழங்கினார். பேராசிரியர் மீனலோசனி நன்றி கூறினார்.