sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையின் புதிய பேராயர் நாளை பொறுப்பேற்பு

/

மதுரையின் புதிய பேராயர் நாளை பொறுப்பேற்பு

மதுரையின் புதிய பேராயர் நாளை பொறுப்பேற்பு

மதுரையின் புதிய பேராயர் நாளை பொறுப்பேற்பு


ADDED : ஜூலை 31, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 31, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை:மதுரை கத்தோலிக்க சபையின் புதிய பேராயராக அந்தோணிசாமி சவரிமுத்து நாளை (ஆக.2) மாலை பொறுப்பேற்கிறார்.

துாத்துக்குடி மாவட்டம் வடக்கு வண்டானம் கிராமத்தைச் சேர்ந்த இவர், 1960ல் பிறந்தார். மதுரை மாவட்டம் கருமாத்துார் அருளானந்தர் கல்லுாரியில் படிப்பை முடித்து, பெங்களூருவில் குருத்துவப் பயிற்சியை முடித்தார். 1987 ல் பாளை., மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். பாளை., ஆயரின் செயலாளர், குருமட அதிபர், திருஅவைச் சட்ட பேராசிரியர், முதன்மை குரு என பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

2019 ல் பாளை., மறைமாவட்ட ஆயராக நியமிக்கப்பட்டார். கடந்தாண்டு நவம்பரில் மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்புசாமி ஓய்வு பெற்றதையடுத்து, அவரது இடத்தில் பொறுப்பு ஆயராக (திருத்துாது நிர்வாகி) நியமிக்கப்பட்டார். தற்போது பேராயராக அறிவிக்கப்பட்டு, நாளை மாலை மதுரை ஞானஒளிவுபுரம் பிரிட்டோ மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பொறுப்பேற்க உள்ளார். ஏற்பாடுகளை மாவட்ட தொடர்பாளர் ஜெரோம் ஏரோனிமுஸ் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us