UPDATED : மே 01, 2026 03:44 PM
ADDED : மே 01, 2026 03:30 PM

அ நிறம் | அளவு
எழுமலை: எழுமலை அருகே மேலத்திருமாணிக்கம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலுக்கு புதிதாக உருவாக்கப்பட்ட தேர் வெள்ளோட்டம் நடந்தது.
அறங்காவலர் குழுத் தலைவர் காசிமாயன், சேடபட்டி ஒன்றிய முன்னாள் சேர்மன் ஜெயச்சந்திரன், ஹிந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் யுவராஜா, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோயிலில் இருந்து புறப்பட்ட தேர் கிராமத்தில் உள்ள தெருக்கள் வழியாக மீண்டும் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. திரளான பொதுமக்கள் தேரை வடம்பிடித்து இழுத்துச் சென்றனர்.
