sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பள்ளியில் இரவு காவலர் அவசியம்

/

பள்ளியில் இரவு காவலர் அவசியம்

பள்ளியில் இரவு காவலர் அவசியம்

பள்ளியில் இரவு காவலர் அவசியம்


ADDED : ஜன 07, 2025 05:03 AM

Google News

ADDED : ஜன 07, 2025 05:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாடிப்பட்டி: வாடிப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இரவு காவலர் இல்லாததால் அடிக்கடி திருட்டு தொடர்கிறது.

இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் ஹாக்கி மைதானத்தை சுற்றி வகுப்பறை கட்டடங்கள், வட்டார வள மைய அலுவலகம், கழிப்பறைகள் உள்ளன. ஓராண்டாக இப்பள்ளியில் இரவு காவலர் இல்லை. 8 கண்காணிப்பு கேமராக்கள் தேர்வு விடுமுறையில் திருடு போனது.

வகுப்பறை கட்டட ஜன்னல்களின் கான்கிரீட் சிலாப்புகளை உடைத்து, அதில் இருக்கும் கம்பிகளை திருடிச் செல்கின்றனர். இரவில் உள்ளே வரும் நபர்கள் மது, கஞ்சா குடிக்கும் பார் போன்ற, பள்ளி வளாகத்தை பயன்படுத்துகின்றனர். கழிப்பறை கதவை உடைத்து கோப்பைகளை சேதப்படுத்தியுள்ளனர். இதனால் பள்ளியில் கணினி உள்பட சாதனங்கள், ஆவணங்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. எனவே இரவு காவலரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us