ADDED : நவ 23, 2024 05:21 AM
திருப்பரங்குன்றம்,; திருப்பரங்குன்றத்தில்ஹிந்து மக்கள் கட்சி, அகில பாரத அனுமன் சேனா மாநில அமைப்பு பொதுச் செயலாளர் ராமலிங்கம் தெரிவித்துள்ளதாவது:
கார்த்திகை, மார்கழி, தை மாதங்களில் ஐயப்பன்,முருக பக்தர்கள் ஏராளமானோர் திருப்பரங்குன்றம் வருவர். இங்கு நுாற்றுக்கும் அதிகமான திருமண மண்டபங்கள் இருப்பதால் பக்தர்கள் இரவில் தங்கி அதிகாலையில் சுவாமி தரிசனம் முடித்து புறப்படுவர்.
இரவு 10:50 மணிக்கு உணவகங்கள், டீக்கடைகளை அடைக்க போலீசார்கூறுகின்றனர். வெளியூர்களிலிருந்து இரவில் திருப்பரங்குன்றத்திற்கு வரும் பக்தர்கள் குழந்தைகளுக்கு பால் வாங்க கூட முடியாமல் அவதி அடைகின்றனர்.
மூன்று மாதங்களுக்கு இரவு 12:00 மணி வரை உணவகங்கள் மற்றும் டீக்கடைகள் இயங்க அனுமதிக்க வேண்டும் எனக்கூறி மாவட்ட நிர்வாகம், போலீசாருக்கு கடிதம் அனுப்பப்பட்டுஉள்ளது.

