/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இரவு நேரம் பஸ் வசதியின்றி தவிப்பு
/
இரவு நேரம் பஸ் வசதியின்றி தவிப்பு
ADDED : ஜன 11, 2026 06:13 AM
பேரையூர்: டி.கல்லுப்பட்டியில் இருந்து பேரையூருக்கு இரவு 10:00 மணிக்கு மேல் பஸ் வசதி இல்லாத தால் இப்பகுதி மக்கள் தவிப்புக்குள்ளாகின்றனர்.
இப்பகுதியைச் சேர்ந்த பலர் கோவை, திருப்பூர், சென்னை உள்பட பல பகுதிகளில் வேலை செய்கின்றனர். அங்கிருந்து இரவில் டி.கல்லுப்பட்டிக்கு நள்ளிரவில் பஸ்சில் வந்து இறங்குகின்றனர். டி. கல்லுப்பட்டியில் இருந்து இரவு நேர டவுன் பஸ்கள் இல்லாததால் குடும்பத்துடன் தவிக்கின்றனர்.
இரவு நேரங்களில் ஆட்டோக்களில் அதிகமாக கட்டணம் கேட்கின்ற னர். குடும்பத்தினருடன் இரவுப் பயணம் செய்யும் ஏழை, நடுத்தர மக்கள் வெகுவாக பாதிக்கின்றனர். இரவு நேரம் வசூல் குறைவு என்பதால் அரசு பஸ்கள் இயங்குவது இல்லை என போக்குவரத்து துறை காரணம் சொல்கிறது. வெளியூரில் இருந்து வரும் பயணி களின் நலன் கருதி இரவு நேரத்தில் டவுன் பஸ்களை இயக்க போக்கு வரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

