sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

நிர்மலா தேவி மேல்முறையீடு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

/

நிர்மலா தேவி மேல்முறையீடு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

நிர்மலா தேவி மேல்முறையீடு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு

நிர்மலா தேவி மேல்முறையீடு உயர்நீதிமன்றம் ஒத்திவைப்பு


ADDED : பிப் 19, 2025 04:04 AM

Google News

ADDED : பிப் 19, 2025 04:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டிய வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்ததை எதிர்த்து பேராசிரியை நிர்மலா தேவி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் ஒரு கல்லுாரியில் பேராசிரியையாக பணிபுரிந்தவர் நிர்மலாதேவி. இவர், ''பெரிய பொறுப்பிலுள்ள சிலருடன் அனுசரணையாக நடந்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்,'' என ஒரு மாணவியிடம் அலைபேசியில் பேசிய ஆடியோ பதிவு வெளியானது.

பாலியல் ரீதியாக தவறாக நடக்க சில மாணவியரை துாண்டியதாக 2018ல் அருப்புக்கோட்டை போலீசார் வழக்கு பதிந்தனர். பின் சி.பி.சி.ஐ.டி., போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்துார் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அந்நீதிமன்றம் நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து 2024 ஏப்.,29 ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அவர் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.

அரசு தரப்பு: பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமியை கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை எதிர்த்து சி.பி.சி.ஐ.டி., மேல்முறையீடு செய்துள்ளது. அம்மனு நிலுவையில் உள்ளது. இவ்வாறு தெரிவித்தது.

நீதிபதி: அவ்வழக்குடன் சேர்த்து பிப்.25 ல் இம்மனுவையும் விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us