ADDED : மார் 16, 2026 05:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லுாரி என்.எஸ்.எஸ்., திட்ட மாணவர்கள் ஓ.ஆலங்குளம், உச்சப்பட்டியிலும், மாணவியர் அச்சம்பட்டியிலும் 7 நாட்கள் முகாம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் பாண்டி துவக்கி வைத்தார். ஆளுமை திறன், மனநலம், குழந்தைகள் பாதுகாப்பு, பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முகாம் நிறைவில் கல்லுாரி செயலாளர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். முதல்வர் ராமசுப்பையா பேசினார். சுயநதிப் பிரிவு இயக்குனர் பிரபு வரவேற்றார். திட்ட அலுவலர்கள் சிலம்பரசன், வெங்கடேஷ் பாரதி, செந்தில்குமார் ஒருங்கிணைத்தனர்.

