ADDED : மார் 13, 2024 12:59 AM
அ நிறம் | அளவு
திருமங்கலம் : ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம் சார்பில் ஊட்டச்சத்து விழா திருமங்கலம் அரசு மருத்துவமனையில் தலைமை டாக்டர் ராம்குமார் தலைமையில் நடந்தது.
இதில் குழந்தைகளுக்கான சமச்சீர் உணவு, கர்ப்பிணிகளுக்கான ஊட்டச்சத்து உணவுகள், தாய்ப்பால் கொடுப்பதால் குழந்தைக்கும், தாய்க்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கப்பட்டது. குழந்தைகள் நல டாக்டர் ராஜேஷ்குமார், ஒருங்கிணைந்த குழந்தைகள் திட்ட அலுவலர் காந்திமதி மற்றும் அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர்.
