ADDED : ஆக 23, 2025 04:04 AM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி : உசிலம்பட்டி வார்டு 17ல் பெண்கள் பாதுகாப்பு மையம், சட்ட உதவி மையம் கட்டுவதற்காக சார் பதிவாளர் அலுவலகம் அருகே 7.5 சென்ட் இடம் தேர்வு செய்துள்ளனர். இடத்தை சமூக நலத்துறைக்கு ஒதுக்கீடு செய்து கொடுக்க உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், தாசில்தார் பாலகிருஷ்ணன், தலைமை சர்வேயர் ஜெயபாண்டியன் உட்பட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்தனர்.
இடத்திற்கான ரோடு வசதி, வளர்ந்துள்ள மரங்கள் அப்புறப்படுத்துவது உள்ளிட்டவை குறித்து விசாரித்தனர்.
