sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே....

/

ஒரு போன் போதுமே....

ஒரு போன் போதுமே....

ஒரு போன் போதுமே....


ADDED : ஜூன் 20, 2025 03:31 AM

Google News

ADDED : ஜூன் 20, 2025 03:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குப்பையான ரோடு

மதுரை மாடக்குளம் மெயின் ரோட்டில் தினமும் குப்பை கொட்டப்படுவதால், அந்த இடமே குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. சுகாதார அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- -முருகேசன், மாடக்குளம்.

தேங்கிய கழிவுநீர்

மதுரை ஆனையூர் கருப்பசாமிநகர் பகுதியில், குப்பை, கழிவுகள் அடைத்து செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கும் கழிவுநீரால் துர்நாற்றம் வீசுகிறது. மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- -சுந்தர், ஆனையூர்.

வீட்டுக்குள் வரும் புழுக்கள்

கள்ளிக்குடி ஒன்றியம் மேல உப்பிலிகுண்டு கிராமத்தில், கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யப்படாமல் உள்ளது. கழிவுநீரில் மிதக்கும் சாக்கடைப் புழுக்கள் வீட்டுக்குள் வருவதால் குழந்தைகளுக்கு நோய்த்தொற்று ஏற்படும் உள்ளது. அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- பாலமுருகன், மேலஉப்பிலிகுண்டு.

தரப்படாத வீடுகள்

மதுரை கப்பலுார் உச்சப்பட்டியில் குடிசைமாற்று வாரியம் மூலம் வீடுகள் ஒதுக்கப்பட்டன. பணிகள் முடிந்து தயாரானபோதும் ஒதுக்கீடு செய்தவர்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- பாபு, உச்சப்பட்டி.

சாக்கடை துர்நாற்றம்

மதுரை பழங்காநத்தம் திருவள்ளுவர் நகர் ரூபி பள்ளி கடைசியில் உள்ள பாதாள சாக்கடையில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார ஆய்வாளர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பாலமுருகன், பழங்காநத்தம்.

நிழலின்றி பயணிகள் அவதி

மதுரை பழங்காநத்தம், பைக்காரா, அழகப்பா நகர் பகுதிகளில் ரோட்டை அகலப்படுத்த நிழற்குடைகளை எடுத்து விட்டனர். எனவே பொது மக்கள் வெயிலில் மிகவும் வாடி வதங்கி அவதிப்படுகின்றனர். உடனே நிழற்குடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- இளங்கோ, முத்துப்பட்டி.






      Dinamalar
      Follow us