sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஒரு போன் போதுமே..!

/

ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!

ஒரு போன் போதுமே..!


ADDED : ஆக 15, 2025 03:12 AM

Google News

ADDED : ஆக 15, 2025 03:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புகாரளித்தும் பயனில்லை

மதுரை கரும்பாலையில் 10 அடிக்கும் மேல் இருந்த ரோடு ஆக்கிரமிப்பால் 3 அடிக்கும் குறைவாகி விட்டது. பாதாள சாக்கடை பழுது, மின் இணைப்பு குறைபாடுகள் என பல்வேறு பிரச்னைகளில் வாழ்கிறோம். பலமுறை புகாரளித்தும் பயனில்லை. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- விக்கி, கரும்பாலை.

தெருநாய் தொல்லை

மதுரை கோமதிபுரம் பாரதி முதல் குறுக்குத்தெருவில் தெருநாய்கள் தொந்தரவு அதிகம் உள்ளதால் குழந்தைகள், வயதானோர் வெளியில் நடமாட பயப்படுகின்றனர். மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராகவன், கோமதிபுரம்.

காற்று தான் வருகிறது

தனக்கன்குளம்ஊராட்சி சீதாலட்சுமி நகர் குடியிருப்பில் ஜல் ஜீவன் திட்டத்தில் வீட்டுக்கு 2 இணைப்பு குழாய்கள் என தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஒன்றரை ஆண்டுகளாகி விட்டது. தற்போது வரை தண்ணீருக்குப் பதிலாக காற்று தான் வருகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சீதாலட்சுமி நகர் மக்கள்.

எங்கும் குப்பை

மதுரை டி.வி.எஸ்., நகர் லட்சுமி நகரில் ரோட்டோரம் குப்பை கொட்டி செல்வதால் துர்நாற்றம் வீசுகிறது. கால்நடைகள் குப்பையை கிளறி ரோட்டில் இழுத்துப் போடுவதால் இடையூறு ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பாலா, டி.வி.எஸ்., நகர்.

நோய்த் தொற்று அபாயம்

மதுரை எச்.எம்.எஸ்., காலனியில் கழிவுநீர் கசிந்து குடியிருப்பு பகுதியில் தேங்கி இருப்பதால் நோய்த் தொற்று அபாயம் உள்ளது. மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுந்தர் கிருஷ்ணன், எச்.எம்.எஸ்., காலனி.

மூடப்படாத குழிகள்

மதுரை புதுவிளாங்குடி தென்றல்நகர் மெயின்ரோட்டில் குடிநீர் குழாய் வால்வு அமைக்க தோண்டிய 5 அடி ஆழம் கொண்ட குழி பணிமுடிந்தும் மூடப்படவில்லை. வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகும் முன்பு மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சண்முகநாதன், புது விளாங்குடி.

அச்சுறுத்தும் கம்பி

மதுரை கூடல்நகர் - பாலமேடு மெயின் ரோடு இந்தியன் வங்கி அருகே ரோட்டில் சென்டர் மீடியன் கம்பி சேதமடைந்து வளைந்துள்ளது. விபத்து ஏற்படும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சசிக்குமார், ஆனையூர்.






      Dinamalar
      Follow us