
வீணாகும் குடிநீர்
* மதுரை விராட்டிபத்து தேனி ரோடு ஜெய்நகர் முதல் தெருவில் மாநகராட்சி பைப் உடைந்து தண்ணீர் வீணாக ரோட்டில் ஓடுகிறது. அதிகாரிகள் விரைந்து சரி செய்ய வேண்டும்.
- ஜெய், விராட்டிபத்து.
----
* ரோட்டில் கழிவுநீர்
* மதுரை மாநகராட்சி 22வது வார்டு மீனாட்சி நகர் 5வது தெரு பகுதியில் ரோடு மற்றும் காலி பிளாட்களில் 3 மாதங்களாக கழிவு நீர் நிரம்பி வழிவதால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- கமல், விளாங்குடி.
* கழிவுநீர் தேக்கம்
மதுரை செல்லுார் பகுதியில் பாதாள சாக்கடை அடைப்பால் வெகுகாலமாக ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். மாநகராட்சி நடவடிக்கை தேவை.
- சங்கரபாண்டியன், செல்லுார்.
* நாய்கள் தொல்லை
மதுரை ஷெனாய் நகரில் தெரு நாய்கள் சுற்றித் திரிவதால் மாணவர்கள் பள்ளி செல்ல அச்சப்படுகின்றனர். இரவில் டூவீலரில் செல்வோரை துரத்திச் சென்று கடிக்கின்றது. வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- வீ.கணேஷ், ஷெனாய் நகர்.
* வாய்க்கால் அடைப்பு
மதுரை மாநகராட்சி 57வது வார்டு எம்.எஸ்.மஹால் அருகே வாய்க்காலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி அடைப்பு ஏற்பட்டுள்ளது. கொசு உற்பத்தி அதிகரித்து மக்கள் நோய் தொற்றுக்கு ஆளாகின்றனர். உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகசுந்தரம், ஞானஒளிவுபுரம்.
* புதிய ரோடு வேண்டும்
மதுரை பைபாஸ் ரோடு வானமாமலை நகர் பிரதான சாலை மற்றும் அருகில் உள்ள வீதிகளில் ரோடு மோசமாக உள்ளது. வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மாநகராட்சி அதிகாரிகள் சரி செய்ய வேண்டும்.
- ஹரிஷ் முத்துராமசாமி, துரைச்சாமி நகர்.

