நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை ஜஸ்டின் கல்வியியல் கல்லுாரியில் காந்தி மியூசியம், காந்தியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் காந்திய சிந்தனை சான்றிதழ் வகுப்பு தொடக்க விழா நடந்தது.
முதல்வர் மார்த்தாள் தலைமை வகித்தார். கல்வி அலுவலர் நடராஜன், ஆராய்ச்சி அலுவலர் ஆர். தேவதாஸ் காந்திய சிந்தனையின் முக்கியத்துவத்தை விளக்கினர். செயலாளர் நந்தாராவ், பேராசிரியை ரதி ஏற்பாட்டை செய்தனர்.

