sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பெரியாறு உபரிநீரை வைகை அணையில் தேக்கலாம் ஒருபோக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

/

பெரியாறு உபரிநீரை வைகை அணையில் தேக்கலாம் ஒருபோக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பெரியாறு உபரிநீரை வைகை அணையில் தேக்கலாம் ஒருபோக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

பெரியாறு உபரிநீரை வைகை அணையில் தேக்கலாம் ஒருபோக விவசாயிகள் சங்கம் கோரிக்கை


ADDED : ஜூலை 27, 2025 04:15 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 04:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளாவிற்கு வீணாக திருப்பி விடப்படும் தண்ணீரை வைகை அணையில் தேக்குவது குறித்து நீர்வளத்துறை அதிகாரிகள் முடிவெடுக்க வேண்டும் என ஒருபோக விவசாயிகள் சங்கத்தினர் அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

நிர்வாகி குறிஞ்சிகுமரன் கூறியதாவது: மே மாதத்தில் அணையில் 134 அடி வரை தண்ணீர் இருக்க வேண்டும். ஆனால் 132 அடி தண்ணீர் இருக்கும் போதே திறந்து விட்டதால் 2 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு கிடைக்காமல் வீணாகி விட்டது. ஆக.10 வரை 'ரூல்கர்வ்' முறைப்படி 137.50 அடி வரை தண்ணீரை தேக்கி வைக்க அனுமதி உண்டு. ஜூலை 26 ல் அணை நீர்மட்டம் 133 அடியாக உயர்ந்து விட்டது. தொடர் மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 4000 கனஅடி வரை வருகிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2100 கனஅடி வரையே தண்ணீரை வெளியே எடுக்க முடியும். எனவே கூடுதலாக உள்ள அந்த தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு வந்தால் பாசனத்திற்கோ குடிநீர் தேவைக்கோ பயன்படுத்தலாம்.

மேலுார், திருமங்கலம் பிரதான வாய்க்கால் மூலம் ஒருபோக சாகுபடிக்கு செப்.15ல் தான் தண்ணீர் திறக்கமுடியும். பெரியாறு அணையில் தண்ணீர் கூடுதலாக வந்து கொண்டிருப்பதால் 'ஓவர் ப்ளோ' ஆவதற்கு முன், கூடுதல் தண்ணீரை வைகை அணைக்கு கொண்டு வர வேண்டும். அடுத்தடுத்து நீர்வரத்து அதிகரிக்கும் போது அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரிக்கும். கேரளாவிற்கு தண்ணீரை அனுப்பி வீணாக்குவதை விட இதுவே நல்ல முறை. நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாரதிதாசன், கண்காணிப்பு பொறியாளர் ஷாம் இர்வினிடம் கோரிக்கை விடுத்துள்ளோம் என்றார்.






      Dinamalar
      Follow us