/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் போக்குவரத்து நெரிசலில் தவித்த திருப்பரங்குன்றம் அரை கி.மீ., ரோட்டை கடக்க 20 நிமிடம்
/
ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் போக்குவரத்து நெரிசலில் தவித்த திருப்பரங்குன்றம் அரை கி.மீ., ரோட்டை கடக்க 20 நிமிடம்
ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் போக்குவரத்து நெரிசலில் தவித்த திருப்பரங்குன்றம் அரை கி.மீ., ரோட்டை கடக்க 20 நிமிடம்
ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் போக்குவரத்து நெரிசலில் தவித்த திருப்பரங்குன்றம் அரை கி.மீ., ரோட்டை கடக்க 20 நிமிடம்
ADDED : ஜூன் 09, 2025 02:24 AM
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில், தனியார் திருமண மண்டபங்களில் நேற்று 200க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்ததால் போக்குவரத்து நெரிசலால் மக்கள் சிரமப்பட்டனர்.
கோயிலில் 78 பதிவு திருமணங்கள், 50க்கும் மேற்பட்ட பரிகார திருமணங்கள், பதிவில்லாத திருமணங்கள் நடந்தன. தவிர தனியார் மண்டபங்களில் நுாற்றுக்கும் மேற்பட்ட திருமணங்கள் நடந்தன. சுவாமி தரிசனம் செய்ய ஒருமணிநேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்தனர்.
திருப்பரங்குன்றத்தில் ஜி.எஸ்.டி. ரோடு தெப்பக்குளம், சரவணப் பொய்கை செல்லும் வழியில் உள்ள வாகன காப்பகம் மட்டும் இருப்பதால், திருமணத்திற்கு வந்தவர்கள் தங்கள் வாகனங்களை ரத வீதிகளிலும், ஜி.எஸ்.டி., மெயின் ரோடு பகுதியிலும் நிறுத்தியதால் பொதுமக்கள், டூவீலரில் செல்வோர் சிரமம் அடைந்தனர்.
இரண்டு பாலங்களுக்கும் இடையில் மெயின் ரோட்டின் இருபுறமும் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டதாலும், புளியமரம் பஸ் ஸ்டாப்பில் ரோட்டின் பாதிவரை வரிசையாக ஷேர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டதாலும் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இரு பாலத்திற்கும் இடையே உள்ள அரை கி.மீ., ரோட்டை கடக்க 20 நிமிடங்கள் ஆனது. போக்குவரத்து போலீசார் பாடு திண்டாட்டமானது. திருவிழா காலங்கள், பவுர்ணமி கிரிவலம் நாட்கள், முகூர்த்த நாட்களில் திருப்பரங்குன்றத்தில் போக்குவரத்து நெரிசல் என்பது தவிர்க்க முடியாததாகி விட்டது.
இரண்டு பாலங்களுக்கும் இடையே ரோட்டின் இருபுறமும் வாகனங்கள் நிறுத்துவதை தடை செய்யவும், ஷேர் ஆட்டோக்கள்பஸ் ஸ்டாப்பை தாண்டி நிறுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூடுதல் போக்குவரத்து போலீசாரை நியமித்து தீர்வு காண வேண்டும்.