sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரை, ஊசி விற்பனை உரிமையாளர் கைது

/

மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரை, ஊசி விற்பனை உரிமையாளர் கைது

மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரை, ஊசி விற்பனை உரிமையாளர் கைது

மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரை, ஊசி விற்பனை உரிமையாளர் கைது

1


ADDED : அக் 16, 2024 05:32 AM

Google News

ADDED : அக் 16, 2024 05:32 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரையில் மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஏற்ற பயன்படுத்தும் சிரிஞ்சுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதியில் மெடிக்கல் ஸ்டோர்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் பல்வேறு இடங்களில் விசாரணை நடத்தினர். செல்லுார் 80 அடி ரோட்டில் வி.ஏ.ஓ., அலுவலகம் அருகே போலீசாரை கண்டதும் ஒரு இளைஞர் தப்பியோட முயற்சித்தார். அவரை பிடித்து விசாரித்த போது போதை மாத்திரைகள், காலி சிரிஞ்சுகள், குளுகோஸ் பாட்டில்கள் வைத்திருந்தது தெரிந்தது.

அவர் செல்லுார் தாகூர்நகரை சேர்ந்த உதயகுமார் 21, பெரியார் பஸ் ஸ்டாண்ட் திருப்பரங்குன்றம் ரோட்டில் உள்ள மெடிக்கல் ஸ்டோரில் போதை மாத்திரைகள் வாங்கியதும், குளூகோஸ் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி போதை மருந்து கலந்து போதை ஏற்றிக்கொள்வதும் தெரியவந்தது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட மெடிக்கல் ஸ்டோரில் சோதனை நடத்திய போலீசார் போதை மாத்திரைகள், காலி சிரிஞ்சுகளை பறிமுதல் செய்தனர். அதன் உரிமையாளர் ஜெய்ஹிந்துபுரம் அப்துல் ரஹ்மானை 23, கைது செய்தனர். மெடிக்கல் ஸ்டோருக்கு 'சீல்' வைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us