நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: திருமங்கலம் மெப்கோ ஸ்லெங்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் இந்தியக் கலை பண்பாட்டு மரபுரிமை தேசிய அறக்கட்டளை மதுரை பிரிவு சார்பில் மரங்களின் மகத்துவம் என்ற தலைப்பில் தேசிய அளவிலான ஓவியப் போட்டிகள் நடந்தன.
முதல்வர் ஈஸ்டர் ஜோதி வரவேற்றார். சமூக ஆர்வலர் கார்த்திகேயன், இளம் இந்தியா அறக்கட்டளை காலநிலை மாற்றத்தின் சீரமைப்பாளர் மதுமிதா பேசினர். ஒருங்கிணைப்பாளர் வாணி ஏற்பாடு செய்தார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

