sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

திருவாதவூர் அருகே பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

/

திருவாதவூர் அருகே பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

திருவாதவூர் அருகே பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

திருவாதவூர் அருகே பஞ்சமி நிலம் ஆக்கிரமிப்பு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்


ADDED : அக் 26, 2024 05:26 AM

Google News

ADDED : அக் 26, 2024 05:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: திருவாதவூர் அருகே பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க தாக்கலான வழக்கில் கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்ட பா.ஜ.,தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொதுநல மனு: பிரிட்டீஷ் ஆட்சியின்போது திருவாதவூர் அருகே டி.மாணிக்கம்பட்டியில் ஆதிதிராவிடர்கள் சிலருக்கு பஞ்சமி நிலம் வழங்கப்பட்டது. அதை விற்கவோ அல்லது மறுவகைமாற்றமோ செய்ய முடியாது. அந்நிலத்தை வி.சி.க.,வை சேர்ந்த சிலர் ஆக்கிரமித்தனர்.

பிளாட்களாக பிரித்து சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளனர். விற்பனை, போலி பட்டா தயாரித்தது தொடர்பாக மேலுார் போலீசில் வழக்கு பதியப்பட்டுள்ளது. பஞ்சமி நிலத்தை மீட்க வேண்டும்.

சம்பந்தப்பட்டோரிடம் மீண்டும் நிலத்தை ஒப்படைக்கக்கோரி கலெக்டருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு கலெக்டர், மேலுார் தாசில்தாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.22க்கு ஒத்திவைத்தது.






      Dinamalar
      Follow us