sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பேரையூர் வட்டார பெற்றோர் கலக்கம் மாணவியரை தொடரும் 'ரோமியோ'க்களால்

/

பேரையூர் வட்டார பெற்றோர் கலக்கம் மாணவியரை தொடரும் 'ரோமியோ'க்களால்

பேரையூர் வட்டார பெற்றோர் கலக்கம் மாணவியரை தொடரும் 'ரோமியோ'க்களால்

பேரையூர் வட்டார பெற்றோர் கலக்கம் மாணவியரை தொடரும் 'ரோமியோ'க்களால்


ADDED : மார் 17, 2025 05:39 AM

Google News

ADDED : மார் 17, 2025 05:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பேரையூர் : பேரையூர், டி.கல்லுப்பட்டி, சேடப்பட்டி, அத்திபட்டி பகுதிகளில் பள்ளி மாணவிகளை பின்தொடர்ந்து செல்லும் ரோமியோக்களின் அட்டகாசம் அதிகரித்துள்ளதால் பெற்றோர்கள் கலக்கத்தில் உள்ளனர்.

பள்ளி நேரம் துவங்கும் அல்லது முடியும் நேரங்களில் மாணவிகள் சாலையில் நடந்து வரும்போது டூவீலர்களில் உலா வரும் ரோமியோக்கள் தொந்தரவு கொடுக்கின்றனர். சில மாணவியர் தங்கள் வீட்டில் பெற்றோரிடம் தெரிவிக்கின்றனர். பலர் பயத்தில் மறைத்து விடுகின்றனர்.

தற்போது தேர்வு காலம் என்பதால் மாணவிகள் படிப்பு கவனத்துடன் சென்று வருகின்றனர். தேர்வு மதியம் முடிந்து விடுவதால் மாணவிகள் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப், சாலை வழியாக சொல்லும் போது, இந்த 'ரோட்டோர' ரோமியோக்கள் அவர்களின் கவனத்தை திசை திருப்ப எதையாவது செய்கின்றனர். இதனால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

பள்ளி நேரங்களில் போலீசார் பஸ் ஸ்டாண்ட், பஸ் ஸ்டாப் பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டும் என பெற்றோர் எதிர்பார்க்கின்றனர்.






      Dinamalar
      Follow us