sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் நல்லசுக்காம்பட்டி அவலம்

/

மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் நல்லசுக்காம்பட்டி அவலம்

மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் நல்லசுக்காம்பட்டி அவலம்

மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் பெற்றோர் நல்லசுக்காம்பட்டி அவலம்

1


ADDED : ஜன 02, 2025 05:29 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:29 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேலுார்: நல்ல சுக்காம்பட்டி துவக்கப்பள்ளி வளாகத்தில் மழை நீர் தேங்குவதால் மாணவர்களின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகி உள்ளது.

பூதமங்கலம் ஊராட்சி நல்ல சுக்காம்பட்டியில் துவக்கப்பள்ளி 50 ஆண்டுகளாக செயல்படுகிறது. இப்பள்ளியில் பெரிய சிவல்பட்டி, தேத்தாம்பட்டி, நல்ல சுக்காம்பட்டி கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் படிக்கின்றனர். மழை பெய்யும்போது, காம்பவுண்ட் சுவருக்கும் வகுப்பறைக்கும் இடையே பள்ளமாக உள்ளதால் மழைநீர் தேங்ககிறது.

பள்ளிக்கு வரும் மாணவர்கள் தண்ணீரைத் தாண்டி வகுப்பறைக்குச் செல்லும் போது வழுக்கி விழுவதால் காயமடைகின்றனர்.

பெற்றோர் ராமநாதன் கூறியதாவது: பள்ளி வளாகத்தில் தேங்கும் மழை நீர் வற்ற 10 நாட்களுக்கு மேலாகிறது. இதனால் கொசு உற்பத்தியாகி காய்ச்சல், தண்ணீர் தொடர்பான தொற்று நோய்களால் மாணவர்கள் பாதிக்கின்றனர்.

அதனால் மாணவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதே வேலையாக உள்ளது. அரசு மருத்துவமனைக்கு சென்றால் ரத்த பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்க பல நாட்கள் ஆகிறது. எனவே, தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் அவலம் நிலவுகிறது.

அதனால் மாணவர்களை பயத்துடனே பள்ளிக்கு அனுப்புகிறோம். பி.டி.ஒ., உள்ளிட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

பள்ளி வளாகத்தினுள் நிரந்தரமாக தண்ணீர் தேங்காதவாறு பேவர் பிளாக் கற்கள் பதிக்க கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

பி.டி.ஒ., ராமமூர்த்தி கூறுகையில், வரக்கூடிய திட்டங்களில் பள்ளிக்கு முன்னுரிமை கொடுத்து பேவர் பிளாக் கற்கள் பதிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.






      Dinamalar
      Follow us