ADDED : மார் 21, 2024 02:18 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலின் உபகோயிலான தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பசலி உற்ஸவம் மார்ச் 31 முதல் ஏப்.
9 வரை நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு மார்ச் 30ல் அம்மன், தெப்பக்குளம் கோயிலில் இருந்து புறப்பட்டு மீனாட்சி அம்மன் கோயிலில் எழுந்தருள்வார். அங்கு இரவு தங்கி மார்ச் 31 மாலை புறப்பட்டு தெப்பக்குளம் கோயில் வந்தடைவார். இதையடுத்து கொடியேற்றம் நடந்து உற்ஸவம் துவங்கும். ரத உற்சவம் ஏப்.8ம் தேதி நடைபெறும்.
