ADDED : நவ 01, 2025 03:01 AM
அ நிறம் | அளவு
மதுரை: நாட்டின் 'இரும்பு மனிதர்' என போற்றப்படும் சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள் விழா, மதுரைக் கல்லுாரி மேல்நிலைப் பள்ளியில் கொண்டாடப்பட்டது.
அவரது படத்திற்கு சமூக ஆர்வலர் இல.அமுதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். படேலின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியர் பாலாஜிராம், உதவி தலைமை ஆசிரியர்கள் மகேஸ்வரன், புவனேஸ்வரி, ஆசிரியர்கள் இளங்குமரன், பாலமுருகன், ஜெயச்சந்திர ராஜன், பூதலிங்கம், சுஜாதா பங்கேற்றனர்.
