நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: வேடர் புளியங்குளத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் ஆண்டு விழா, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா,
மருத்துவ முகாம் நடந்தது. மாவட்ட பார்வையற்றோர் நலச்சங்க தலைவர் குமார் தலைமை வகித்தார். பொருளாளர் சுதா வரவேற்றார். மாற்றுதிறனாளிகள் தொழில் நல அலுவலர் வெங்கட சுப்பிரமணியன், ஆர்.டி.ஓ., சிவஜோதி, தாசில்தார் கவிதா கலந்து கொண்டனர். 51 பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. டி.வி.எஸ்., ராமச்சந்திரா மருத்துவமனைகள் சார்பில் கண், பொது மருத்துவ முகாம் நடந்தது.

