ADDED : செப் 25, 2024 03:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் 5 (மேற்கு) திருப்பரங்குன்றம் அலுவலகத்தில் மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் மக்கள் குறைதீர்க் கூட்டம் நடந்தது.
சொத்துவரி, பாதாள சாக்கடை இணைப்பு, தெருவிளக்கு வசதி, ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டியது, சுகாதார வசதி உள்ளிட்டவை கோரி 56 மனுக்கள் அளிக்கப்பட்டன. சில மனுக்களுக்கு கூட்டத்திலேயே நடவடிக்கை எடுக்கப்பட்டது. பிற மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள மேயர் உத்தரவிட்டார்.
மண்டல தலைவர் சுவிதா, உதவி கமிஷனர் ராதா, உதவி செயற்பொறியாளர் முத்து, உதவி நகர் நலஅலுவலர் அபிஷேக், சுகாதார அலுவலர் திருமால், உதவி வருவாய் அலுவலர் சித்ரா, கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.