sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

/

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்

ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி மக்கள் போராட்டம்


ADDED : ஆக 19, 2025 01:12 AM

Google News

ADDED : ஆக 19, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உசிலம்பட்டி; உத்தப்பநாயக்கனுார் உ.மாரிபட்டி கிராமத்தைச் சேர்ந்த போலீஸ் துறையில் பணியாற்றும் குடும்பத்தினர் காமராஜர் நகரில் இருந்து உ.மாரிபட்டி செல்லும் ரோட்டில் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் ஊருக்கும், கோயிலுக்கும் செல்ல பாதை தடைபட்டது. இவ்விவகாரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.

நேற்று காலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வருவாய்த்துறையினர் வந்தபோது, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளதாக ஆக்கிரமிப்பாளர்கள் கூறினர். ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் தயங்கியதை கண்டித்து வத்தலக்குண்டு ரோட்டில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். பின்னர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் மீண்டும் மறியலில் ஈடுபட டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் அகற்ற முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதை அலைபேசியில் வீடியோ எடுத்த இளைஞரை போலீசார் பிடித்த போது மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.உசிலம்பட்டி உதவி கலெக்டர் உட்கர்ஷ்குமார், தாசில்தார் பாலகிருஷ்ணன், டி.எஸ்.பி., சந்திரசேகரன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

விரைவில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us