ADDED : டிச 03, 2024 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பேரையூர்: பேரையூர் தாலுகா சூலப்புரம் ஊராட்சி செல்லாயிபுரத்தை சேர்ந்த இந்திரா நினைவு குடியிருப்பு பகுதியில் உள்ளவர்கள் நேற்று பட்டா கேட்டு தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
அவர்கள் கூறுகையில், ''நாங்கள் 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் குடியிருந்து வருகிறோம்.
35 ஆண்டுகளாக வீட்டு வரி, மின்சார வரியும் செலுத்தி வருகிறோம். ஆனால் பட்டா இல்லை. வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும்'' என்றனர்.