நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ஒன்றியம் தனக்கன்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட அய்யர் காலனியில் 70க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பத்துக்கும் மேற்பட்ட தெருக்களில் தெரு விளக்குகள், கழிவுநீர் கால்வாய், சாலை வசதி இல்லை.
அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்னை உள்ளது. அவற்றை சரி செய்து கொடுக்கவும், மெயின் ரோடு ஆக்கிரமிப்பதை தடுக்கவும் கோரி கமிஷனர் செந்தில் மணியிடம் அப்பகுதியினர் கோரிக்கை மனு அளித்தனர்.

