ADDED : ஏப் 17, 2026 11:19 PM
அ நிறம் | அளவு
கொட்டாம்பட்டி: வஞ்சி நகரத்தில் புதியவன் என்பவர் உடைகல் குவாரி நடத்தி வருகிறார். இது சட்டவிரோதமாக நடப்பதாக வழக்கறிஞர் பாண்டியராஜன் நேற்று முன்தினம் கொட்டாம்பட்டி போலீசில் புகார் கொடுத்தார்.
குவாரிக்கு செல்லும் பாதையில் வழக்கறிஞர் தலைமையில் பொது மக்கள் மறியல் போராட்டம் நடத்தினர்.
சம்பவ இடத்திற்கு சென்ற இன்ஸ்பெக்டர் லோகநாதன் கனிம வனத்துறையினரிடம் அறிக்கை பெற்று, நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதனால் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.
