ADDED : மார் 16, 2026 05:29 AM
அ நிறம் | அளவு
பேரையூர்: பேரையூர் தாலுகாவில் வைகை கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் 3 பேரூராட்சி, 72 ஊராட்சி பகுதிகளுக்கு குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. புதிய பைப் அமைக்கும் பணி நடக்கிறது. இதனால் குடிநீர் வினியோகம் தடைபட்டுள்ளது.
பேரையூர்-உசிலம்பட்டி ரோட்டில் குழாய் உடைந்து நான்கு நாட்களாக குடிநீர் ரோட்டில் ஓடுகிறது. இவற்றை சீரமைத்து சீரான குடிநீர் விநியோகம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
