sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

பைபர் படகில் செல்ல அனுமதிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

/

பைபர் படகில் செல்ல அனுமதிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

பைபர் படகில் செல்ல அனுமதிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு

பைபர் படகில் செல்ல அனுமதிக்க வழக்கு; உயர்நீதிமன்றம் உத்தரவு


ADDED : பிப் 22, 2024 06:53 AM

Google News

ADDED : பிப் 22, 2024 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழாவிற்கு பைபர் படகில் சென்றுவர அனுமதி கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பிரின்சோ ரைமண்ட் தாக்கல் செய்த பொதுநல மனு:

கச்சத்தீவில் புனித அந்தோணியார் சர்ச் உள்ளது. ஆண்டுதோறும் கச்சத்தீவு சர்ச் திருவிழாவிற்கு ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் படகுகளில் சென்றுவருகின்றனர். நாளை (பிப்.,23), பிப்.,24ல் திருவிழா நடைபெற உள்ளது. இயந்திரம் பொருத்திய ஒரு பைபர் படகில் செல்ல எரிபொருளுக்கு ரூ.2500 செலவாகும். இதில் 10 பேர் பயணிக்கலாம். படகு பாதுகாப்பானது. ராமேஸ்வரம், ஓலைக்குடா பகுதி மீனவர்களை பைபர் படகில் கச்சத்தீவு சென்றுவர அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை செயலர், கலெக்டர், மீன்வளத்துறை உதவி இயக்குனருக்கு மனு அனுப்பினோம். பரிசீலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு: மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.






      Dinamalar
      Follow us