நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மகளிர் தினத்தை முன்னிட்டு யானைமலை கிரீன் பவுண்டேஷன் சார்பில், மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.
உத்தங்குடி வளர் நகர் பகுதியில் நடந்த நிகழ்ச்சிக்கு திருமங்கலம் வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தென்னவன் முன்னிலை வகித்தார். திருமோகூர் ஐஸ்வர்யா வரவேற்றார். மகளிர் தின கருப்பொருள் குறித்து விக்னேஸ்வரி பேசினார். புங்கை மரக்கன்றுகள் நடப்பட்டன.
மாட்டுத்தாவணி போலீஸ் சார்பில் வெங்கடேஸ்வரன், ஆலோசகர் ராகேஷ், பாலமுருகன், பாஸ்கரன், திருவாதவூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் தண்ணாயிர மூர்த்தி, தியாகராஜர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் கார்த்திக் உட்பட பலர் பங்கேற்றனர். உறுப்பினர் ஸ்டெல்லா மேரி நன்றி கூறினார்.

