ADDED : ஜூன் 22, 2026 11:26 PM

அ நிறம் | அளவு
மதுரை: மதுரை லேடிடோக் கல்லுாரி, ஓட்டல் கோர்ட் யார்ட் பை மேரியட் சார்பில் கல்லுாரியில் மரக்கன்று நடும் விழா நடந்தது.
அருட்பணியாளர் பிரியதர்ஷினி தலைமை வகித்தார். வணிக நிர்வாகத்துறை தலைவர் ஜெயக்கோடீஸ்வரி வரவேற்றார். கல்வி நிறுவனங்களும், தொழில் நிறுவனங்களும் இணைந்து செயல்படுவது அவசியம் என வலியுறுத்தப்பட்டது. கல்லுாரியின் வணிக நிர்வாகத்துறை, மாணவர் நல அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன. பேராசிரியர் பியூலா மேபல் நன்றி கூறினார்.
