நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே பசுக்காரன்பட்டி பந்தாணிக்கண்மாய் கரையில் பனை விதை நடும் பணியை தேனி வாசவி கிளப், இளம்பிறை லயன்ஸ் சங்கம், ஆண்டிபட்டி நல்லுலகம் அமைப்பினர், உசிலம்பட்டி மனவளக்கலை மன்றம் இணைந்து மேற்கொண்டனர்.
கிராமத்தலைவர் தினேஷ்குமார் தலைமையில் இளைஞர்கள், தன்னார்வ நிறுவனங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து கிராமத்து மக்களுக்கு பிளாஸ்டிக் தடுப்பு விழிப்புணர்வாக துணிப்பை, புத்தகங்கள் வழங்கினர்.

