ADDED : செப் 13, 2026 05:32 PM
அ நிறம் | அளவு
பெருங்குடி: மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன.
தாவரவியல் மாணவர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வனத்துறை அதிகாரிகள், வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், சுற்றுச்சூழல் மேம்பாட்டு குழுவினர் வழிகாட்டினர். முதுமலை புலிகள் காப்பக வனச்சரகர் சிவக்குமார் துவக்கி வைத்தார். கல்லுாரி டீன் சுரேஷ், பேராசிரியர்கள் ஆதி பெருமாள்சாமி, முத்துவேல் கலந்து கொண்டனர்.
