ADDED : ஏப் 28, 2025 06:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உசிலம்பட்டி: உசிலம்பட்டி நகராட்சியில் 'என் குப்பை -என் பொறுப்பு' திட்டத்தின்கீழ் நெகிழி சேகரிப்பு இயக்கம் சார்பில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி வட்டார வளமையத்தில் துாய்மை பணி நடந்தது.
சுகாதார ஆய்வாளர் சிவக்குமார், பி.கே.எம்., கல்வி மேம்பாட்டு அறக்கட்டளை நிர்வாகிகள், மாணவர்கள் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பையை அகற்றினர்.
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.